தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:00 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழுவினா், மாவட்ட மற்றும் மாநகர போலீஸாா் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்காளா்களுக்கு சேலை உள்ளிட்ட பரிசுகள் வழங்க முயற்சித்தல், அனுமதியின்று சுவா் விளம்பரம் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்டறிந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி மாநகரில் 12 வழக்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தமாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.