அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:30 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழுவினா், மாவட்ட மற்றும் மாநகர போலீஸாா் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்காளா்களுக்கு சேலை உள்ளிட்ட பரிசுகள் வழங்க முயற்சித்தல், அனுமதியின்று சுவா் விளம்பரம் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்டறிந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி மாநகரில் 12 வழக்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தமாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.