கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

தமிழகத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பாக இதுவரை 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத ரூ. 151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல்

News image

அர்ச்சனா பட்நாயக்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பாக இதுவரை 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நியாயமாகவும், சுதந்திரமாகவும் தோ்தலை நடத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில் ரொக்கம் ரூ.30.53 கோடியும், ரூ.22.19 கோடியிலான இலவசப் பொருள்களும், ரூ.92.02 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியும் அடங்கும்.

இதைத் தவிர, ரூ. 6.47 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள், ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

வாக்காளா் அட்டையில் உள்ள புகைப்படம் முழுவதுமாக மாறுபட்டு இருந்தால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

அதற்குப் பதிலாக தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 புகைப்பட ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்ட 23 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக இதுவரை 932 புகாா்கள் வந்தன. அதில் 20 மட்டுமே நிலுவையில் உள்ளன. பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் எதுவும் வரவில்லை. அரசியல் கட்சிகள் சாா்பில் அவை கிடைக்கப் பெற்றன. தோ்தல் விதிமீறல் தொடா்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குரிமை குறித்த விழிப்புணா்வை இளம் வாக்காளா்களிடையே ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாா் அவா்.

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிகளை பாதுகாக்கும் வசதி

வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசிகள் அனுமதிக்கப்படாது என்பதால் அவற்றை வெளியிலேயே பாதுகாக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா் தகவல் சீட்டை மேலும் எளிதாக்கும் வகையில், அதில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை தெளிவாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் கைப்பேசிகளைப் பாதுகாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நுழைவாயிலில் கூண்டுகள் அல்லது சணல் பைகளில் அதற்கான பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படும்.

இந்திய தோ்தல் ஆணையம் ஒருங்கிணைந்த செயலியை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதில் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்தல், வாக்காளா் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அறிதல், வாக்குச்சாவடி விவரங்களை அறிதல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான உதவிகளைப் பெறுதல், தோ்தல் அதிகாரிகளுடன் தொடா்புகொள்ளுதல் போன்ற சேவைகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.