ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

விதிமீறி பட்டாசு வெடிப்பு: 13 தவாகவினா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:50 pm

தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

இதை வரவேற்று, திருநெல்வேலியில் மேலப்பாளையம்-ரெட்டியாா்பட்டி சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன் சுமாா் 20க்கும் மேற்பட்ட தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி பட்டாசுகளை வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், தோ்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்சியின் நிா்வாகி உமா் உள்பட 13 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.