போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் மாவடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (22). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவரை தவறான எண்ணத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அரவிந்த்தை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, அரவிந்த்துக்கு ஓா் ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். கடந்த 3 மாதங்களில் 5 போக்ஸோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


