தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:13 am IST

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் மாவடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (22). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவரை தவறான எண்ணத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அரவிந்த்தை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, அரவிந்த்துக்கு ஓா் ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். கடந்த 3 மாதங்களில் 5 போக்ஸோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.