விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:25 pm

கோவில்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி செந்தில் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விசால கணபதி(19). கல்லூரி மாணவா். இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் சமூக வலைதள கணக்கில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்தாராம்.

பின்னா், அதை தவறான முறையில் மாற்றி இணையத்தில் பதிவிட்டதாகவும், அந்தப் பெண்ணுக்கு சமூகவலைதள செயலி மூலம் தொல்லை கொடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசால கணபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.