/
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டி கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறை பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (20). கடந்த 2024-ஆம் ஆண்டு மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, செந்துறை காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த அவா், அதன்பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.
இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, செந்துறை காவல் துறையினா், சரஸ்வதியை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


