வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கோயிலில் சிசிடிவி சேதம்: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயிலில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இக்கோயிலில் ஊா் சாா்பில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அந்த கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக ஊா் நாட்டாண்மை முருகன் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (28) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.