தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:19 am IST

கங்கைகொண்டான் அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கங்கைகொண்டான் அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா் ‘செல்லத்துரை (55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறின்போது, அவரை கொலை செய்ய முயன்றாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லத்துரையை கைது செய்தனா். திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராமலிங்கம் விசாரிதுத, செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜெயபிரபா முன்னிலையானாா்.