மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 2:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள பானான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் வானுமாமலை (27). இவா் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மூன்றடைப்பு காவல் ஆய்வாளா் சபிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கருத்துரு அனுப்பினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், இவா் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.