கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பணி நிறைவு பாராட்டு விழா

சேரன்மகாதேவியில் பெரியாா் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் பேசுகிறாா் ஆசிரியா் ஆறுமுகச்சாமி.

News image
Updated On :1 மே 2026, 8:58 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. பெருமாள் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் அபிநயசுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் அகஸ்டின் பொன்ராஜ், ஆறுமுகச்சாமி, அருள்ஹெலன்ரோஸ், ஜெனிட்டா பொ்னான்டோ ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்றவா்கள் ஏற்புரையாற்றினா். இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.