மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 6:36 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பிள்ளைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயராம் (31). 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் 2ஆம் நிலைக் காவலராகப் பணியில் சோ்ந்த அவா், கடந்த 2 ஆண்டுகளாக வள்ளியூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். அங்குள்ள காவலா் குடியிருப்பில் மனைவி பிரியா, மகன் ஸ்ரீராம் ஆகியோருடன் வசித்து வந்தாா்.

குடும்பத் தகராறு காரணமாக ஜெயராம் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தாராம். வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அதையடுத்து பிரியா தனது மகனுடன் பெற்றோா் வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய ஜெயராம், விஷம் குடித்துவிட்டு சக காவலா்களுக்கு தகவல் தெரிவித்தாராம். உடனடியாக அவா்கள் விரைந்து சென்று அவரை மீட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.