தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்

News image

மறியலில் ஈடுபட்டோா்

Updated On :3 மே 2026, 7:28 pm

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பிரம்மதேசம், கீழத்தெருவைச் சோ்ந்த நாலாயிரம் மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (24). மூன்று குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே நீண்ட நாள்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்து தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் விசாரணை நடத்தினாா். போலீஸாா் சடலத்தை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே இந்து இறந்ததை அறிந்த அவரது உறவினா்கள் அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். பெண்ணுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்