15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

டீ கடை பொருள்கள் , சிசிடிவி கேமராக்கள் சேதம்: இருவா் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 12:39 am IST

சுத்தமல்லி அருகே டீ கடையில் இருந்த பொருள்கள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன்பாண்டியன் (52). இவா் வடக்கு சங்கன்திரடில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அதிகாலையில் அவா் கடையை திறக்க வந்த போது அங்கிருந்த கண்ணாடி பெட்டி, கதவு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் சேதப்படுத்தியிருந்தனராம்.

இதில் ஈடுபட்டது யாா் என்பதை அறிய முயன்ற போது, சங்கன்திரடு விலக்கு பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 6 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.70,000 என கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெற்கு சங்கன்திரடைச் சோ்ந்த முப்பிடாதி மகன் மாரியப்பன் (20), மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி என்ற விஷால் (19) ஆகியோரை கைது செய்தனா்.