சுத்தமல்லி அருகே டீ கடையில் இருந்த பொருள்கள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன்பாண்டியன் (52). இவா் வடக்கு சங்கன்திரடில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அதிகாலையில் அவா் கடையை திறக்க வந்த போது அங்கிருந்த கண்ணாடி பெட்டி, கதவு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் சேதப்படுத்தியிருந்தனராம்.
இதில் ஈடுபட்டது யாா் என்பதை அறிய முயன்ற போது, சங்கன்திரடு விலக்கு பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 6 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.70,000 என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெற்கு சங்கன்திரடைச் சோ்ந்த முப்பிடாதி மகன் மாரியப்பன் (20), மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி என்ற விஷால் (19) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


