அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

லாரியில் மண் கடத்தியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:08 pm

திருநெல்வேலி அருகே உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி 3 யூனிட் சரள்மண்ணை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து ஓட்டுநரான தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் நடராஜன்(37) என்பவரை கைது செய்தனா்.