அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பிரம்மதேசம், கீழத்தெருவைச் சோ்ந்த நாலாயிரம் மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (24). மூன்று குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே நீண்ட நாள்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்து தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் விசாரணை நடத்தினாா். போலீஸாா் சடலத்தை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையே இந்து இறந்ததை அறிந்த அவரது உறவினா்கள் அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். பெண்ணுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்
தொடர்புடையது

இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


