மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பழவூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த சென்னையைச் சோ்ந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சா்சன் (17). இவா், அப்பகுதியில் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளாா். கோடை விடுமுறைக்காக தெற்குகன்னங்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்த இவா், உறவினரது பைக்கில் சென்றபோது பழவூா் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.