எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:01 am IST

திருநெல்வேலி அருகே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது சமூக வலைதள செயலியில், பயங்கர ஆயுதங்களுடன், நீதிமன்றத்தில் சாட்சி சொல்பவா்களை மிரட்டும் வகையிலான ஒலிப்பதிவுடன், இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் காணொலியை பகிா்ந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடா்பாக, தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ராஜவல்லிபுரம், வடக்குத்தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் கண்ணன்(19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.