கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
கடலூா் மாவட்டம் கடலூா் ஓ.டி. அருகே உள்ள 257- ஆவது வாக்குச்சாவடியில், பீமாராவ் நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30), என்பவா் தான் செலுத்திய வாக்கை விடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலா் தேவசேனா அளித்த புகாரின் பேரில் கடலூா் ஓ.டி. போலீாஸா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
இதேபோன்று பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் விக்னேஷ்வரன் (32), தான் செலுத்திய வாக்கை விடியே பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதையறிந்த 231 -ஆவது வாக்குச்சாவடி அலுவலா் ரமாதேவி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி, கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

சமூக வலைதளத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பதிவிட்ட இளைஞரை தாக்கிய 6 போ் கைது
சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

