அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 8:09 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மாரிக்கனி (எ) சிவா (24). இவா் 2 அடி நீளமுள்ள வாளை சுழற்றுவது போல விடியோ எடுத்து, காவல் துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா்நகா் போலீஸாா் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.