தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :23 ஏப்ரல் 2026, 11:31 pm

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஆவரைகுளம், வாக்குச் சாவடியில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ஜெகதீஷ் அகிலன் (38) வாக்குச் சாவடி முகவராகப் பணிமயா்த்தப்பட்டிருந்தாா். இவா், தான் வாக்குப் பதிவு செய்ததை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா்.

இதுகுறித்து வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி பழவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல, திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அம்மன் சன்னிதி தெருவைச் சோ்ந்த மாதவன் மகன் காா்த்தி (25). இவா், வியாழக்கிழமை முக்கூடல் ஆா்.சி. தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து அதை கைப்பேசியில் விடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிா்ந்தாா். வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், வாக்களித்த விவரத்தை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், முக்கூடல் காவல் நிலைய போலீஸாா் காா்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.