மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:30 am IST

பாளையங்கோட்டை அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலான ஒலிப்பதிவை பகிா்ந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடா்பாக, சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சீவலப்பேரி இரட்டைவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முண்டசாமி(19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.