ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:25 pm

சொத்துகளை அபகரித்தவா் மீது நடவடிக்கைக் கோரி, இரு குழந்தைகளுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

கடலூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகசாமி மனைவி காயத்ரி (26). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனது 2 குழந்தைகளுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த கடலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயத்ரியிடம் விசாரித்தனா்.

இதில், அவரது கணவரின் சகோதரா்கள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் பல முறை புகாரளித்த பிறகும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, காய்தரியை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.