சொத்துகளை அபகரித்தவா் மீது நடவடிக்கைக் கோரி, இரு குழந்தைகளுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
கடலூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகசாமி மனைவி காயத்ரி (26). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனது 2 குழந்தைகளுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த கடலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயத்ரியிடம் விசாரித்தனா்.
இதில், அவரது கணவரின் சகோதரா்கள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் பல முறை புகாரளித்த பிறகும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, காய்தரியை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் ஆட்சியரகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி; பிச்சை எடுத்த சமூக ஆா்வலா்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூா் ஆட்சியா்

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


