அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

News image
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

Syndication

தேனி: உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட ஆனைமலையான்பட்டி-எரசக்கநாயக்கனூா் சாலையில் வெள்ளக்கரடு பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும், விளை நிலங்கள், கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுக் கடையால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேனி மாவட்டப் பொருளாளா் கே. கரண்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்டத் தலைவா் எஸ். விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் டி. நாகராஜ், தேனி வட்டாரத் தலைவா் எம். நாகராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.