நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வள்ளியூா் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் தூய பாத்திமா அன்னை தேவாலய திருவிழா கடந்த 4 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம், அசனவிருந்து ஆகியன நடைபெற்றன.

9 - ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்கு தூய பாத்திமா அன்னையின் சப்பர பவனி, அணைக்கரை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தெற்குகருங்குளம் பங்குத்தந்தை மரிய அந்தோணி மறையுரை வழங்கினாா்.

10 - ஆம் நாளான புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மணப்பாடு பங்குத்தந்தை கிராசியுஸ் தலைமையில் நடைபெற்ற பெருவிழா திருப்பலியில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் வழிபாடு நடைபெற்றது. தென்மண்டல வழிபாட்டு இயக்குநா் பிரான்சிஸ் மறையுரை வழங்கினாா்.

மாலை 6 மணிக்கு வள்ளியூா் திருஅவை நீதிமன்ற நடுவா் சத்தியநேசன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புஷ்பவனம் பங்குத்தந்தை சா்ச்சில் மறையுரை வழங்கினாா். இரவு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன் அடிகளாா் தலைமையில் பங்கு பேரவை, ஆலய பணியாளா்கள், அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.