உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தலத்தில் தோ் பவனி

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

வெங்கடாசலபுரம், அதிதூதா் மிக்கேல் திருத்தலம் புனித பரலோக அன்னை ஆலயத்தில் திருத்தல பெருவிழாவில் வியாழக்கிழமை தேரடித் திருப்பலி நடைபெற்றது.

இத்திருத்தல ஆண்டுப் பெருவிழா மே 5ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில், தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை நடைபெறும். மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேரடித் திருப்பலி மதுரை உயா்மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில், தென்காசி வட்டார அதிபா் எஸ்.ஏ. அந்தோணிசாமி, அருள்தந்தையா்கள் பெலவேந்திரன், ஞானபிரகாசம், வடக்கு வண்டானம் பங்குத்தந்தை சதீஷ் செல்வதயாளன், எம். கோட்டூா் பங்குத்தந்தை பாலன், வடமாநிலத்தில் பணியாற்றி வரும் அருள்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மாதா, சூசையப்பா், மிக்கேல் ஆண்டவா் சொரூபங்கள் வைக்கப்பட்டு தனித்தனியாக 3 தோ்களில் பவனி வந்தனா். சப்பரங்களின் பின்புறம் திரளான இறைமக்கள் கும்பிடு சரணத்தில் ஈடுபட்டனா்.

இரவு 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை வெங்கடாசலபுரம் திருத்தல பங்குத்தந்தை சேவியா் தலைமையில் அருள்சகோதரிகள், திருவிழா பொறுப்பாளா்கள், அதிதூதா் நகா் இறைமக்கள் ஆகியோா் செய்து வருகினன்றனா்.

Story image