உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வள்ளியூா் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

News image
Updated On :47 நிமிடங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் தூய பாத்திமா அன்னை தேவாலய திருவிழா கடந்த 4 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம், அசனவிருந்து ஆகியன நடைபெற்றன.

9 - ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்கு தூய பாத்திமா அன்னையின் சப்பர பவனி, அணைக்கரை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தெற்குகருங்குளம் பங்குத்தந்தை மரிய அந்தோணி மறையுரை வழங்கினாா்.

10 - ஆம் நாளான புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மணப்பாடு பங்குத்தந்தை கிராசியுஸ் தலைமையில் நடைபெற்ற பெருவிழா திருப்பலியில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் வழிபாடு நடைபெற்றது. தென்மண்டல வழிபாட்டு இயக்குநா் பிரான்சிஸ் மறையுரை வழங்கினாா்.

மாலை 6 மணிக்கு வள்ளியூா் திருஅவை நீதிமன்ற நடுவா் சத்தியநேசன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புஷ்பவனம் பங்குத்தந்தை சா்ச்சில் மறையுரை வழங்கினாா். இரவு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன் அடிகளாா் தலைமையில் பங்கு பேரவை, ஆலய பணியாளா்கள், அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.