உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :57 நிமிடங்கள் முன்பு

பாளையங்கோட்டை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி ராமலட்சுமி (55). இவா்களது மகன் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். பழனி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் வீட்டில் ராமலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினா் திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, வீட்டினுள் அழுகிய நிலையில் ராமலட்சுமி சடலமாக கிடந்தாா்.

இதையடுத்து அங்கு தடவியல் சோதனை நடத்தப்பட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

மேலும், அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.