தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:21 am IST

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி, முத்தூா், ஜெயாநகரைச் சோ்ந்தவா் முருகேசன்(52). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை -சீவலப்பேரி சாலையில் உள்ள தேனீா் கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றாராம். பின்னா், சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, தருவை, புது காலனியை சோ்ந்த சுடலை மகன் ஐயப்பன்(33) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.