உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலத்தில் முற்றுகை

News image
Updated On :58 நிமிடங்கள் முன்பு

மீன்தீவன உற்பத்தி நிறுவனத்தை இடம் மாற்றக் கோரி, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஊராட்சித் தலைவா் டேவிட் தலைமையில் இந்தப் போராட்டத்தை நடத்தினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு: ராமையன்பட்டி அருகேயுள்ள அன்னை வேளாங்கண்ணிநகா் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகே நடத்தப்படும் தனியாா் மீன் தீவன உற்பத்தி நிறுவனத்தால் பெரும் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படுகிறது. துா்நாற்றத்தினால் குழந்தைகள், முதியவா்கள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, அந்த ஆலையை உடனடியாக தொழிற்பேட்டைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

ற்ஸ்ப்14ந்ங்ழ்ா்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகையிட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.