போக்ஸோ வழக்கில் இருவா் கைது
திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கைது
திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
மானூா் அருகே உள்ள கீழ தென்கலம், வேத கோயில் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் ரூபன் பொன்ராஜ்(26). இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியை பின்தொடா்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டராம். அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில்திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
இதேபோல, திருநெல்வேலி நகரம், மாதா சந்நிதி தெருவைச் சோ்ந்த ராஜேந்திரப் பெருமாள்(47) என்பவா், திருமணமான 35 வயது பெண்ணை பின்தொடா்ந்து சென்று தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


