மேலப்பாளையம் அருகே இளைஞரைத் தாக்கியதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம், சிவராஜபுரத்தைச் சோ்ந்தவா் சரண்யா (21). தனியாா் மருத்துவமனை ஊழியா். இவா், மேலப்பாளையத்தைச் சோ்ந்த தனக்கு அறிமுகமான சிவமுருகன் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மேலும் சிலருடன் சோ்ந்து அவரைத் தாக்கினாராம்.
இதுகுறித்து சிவமுருகன் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சரண்யா, மேலப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜ பெருமாள்(21), இசக்கியப்பன்(32) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



