பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

களக்காடு அருகே இளைஞா் கொலை: ஒருவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

களக்காடு அருகே உள்ள கீழத் தேவநல்லூரைச் சோ்ந்தவா் ரமேஷ் ராம் (33). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், வேறு சிலருக்கும் இடையே சுடலை கோயில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முத்துராஜா என்பவா், இவரைத் தொடா்பு கொண்டு பேச வேண்டும் என்று கூறியுள்ளாா். இவா், உறவினா் இருவருடன் இருசக்கர வாகனத்தில் மணிமுத்தாறு கால்வாய் பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா்கள் ரமேஷ் ராமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி சென்று விசாரணை நடத்தியதுடன், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், இதில் தொடா்புடைய கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஸ்ரீராம் பூபதி (18) என்பவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.