ஆசிய சிலம்ப சம்மேளனம் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மலேசியாவில் உள்ள தரங்கானோ நகரில் இப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சீனா, நேபாளம் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் இந்திய அணி சார்பில் 46 வீரர்கள் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் மலேசிய அணியும், ஜூனியர் பிரிவில்
இந்திய அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆசிய சிலம்பாட்டக் கழக துணைத் தலைவர் ஜே.ஜே.ஆர். ஜெஸ்டின் பரிசுகளை வழங்கினார். இந்திய அணியின் மேலாளராக ஆசிய சிலம்பாட்டக் கழக பொதுச் செயலர் களரி.பி. செல்வராஜ், பயிற்சியாளராக சுதாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! முதல்வர் விஜய்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


