சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

குழித்துறையில் பள்ளி வேன்-மினிலாரி மோதல்: ஆசிரியை, மாணவியர் காயம்

குழித்துறை சந்திப்பில் தனியார் பள்ளி வேன் மீது காய்கனி ஏற்றி வந்த மினிலாரி மோதியதில் பள்ளி ஆசிரியை மற்றும் 4 மாணவியர் காயமடைந்தனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

குழித்துறை சந்திப்பில் தனியார் பள்ளி வேன் மீது காய்கனி ஏற்றி வந்த மினிலாரி மோதியதில் பள்ளி ஆசிரியை மற்றும் 4 மாணவியர் காயமடைந்தனர்.

 களியக்காவிளை அருகேயுள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வேன் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் பள்ளி நோக்கி புறப்பட்டது. வேன் குழித்துறை சந்திப்பில் வந்த போது பின்னால் வந்த காய்கனி ஏற்றிவந்த மினிலாரி பள்ளி வேன் மீது மோதியது.

 இதில் வேனில் இருந்த ஆசிரியை மரியகிரி பகுதியைச் சேர்ந்த பிரான்சீஸ் மனைவி நிர்மலாதேவி (38), 11 ஆவது வகுப்பு படிக்கும்  நெல்லிக்காதுறுவல் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெனிஷா (16), 11 ஆவது வகுப்பு படிக்கும் மேக்கோடு வல்சலம் மகள் சினு (16) 6 ஆம் வகுப்பு படிக்கும் களியக்காவிளை பாலப்பழஞ்சி ஆன்றணி மகள் அப்ஷனா பெரடிட் (11), 6 ஆவது வகுப்பு படிக்கும் மலையடி பகுதியைச் சேர்ந்த ஹென்றி கஸ்லால் மகன் ஹென்றிக் போசிக்கா (11) ஆகியோர் காயமடைந்தனர்.

 இம் மாணவியரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.