சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோழிவிளை - மருதங்கோடு சாலையில் சுகாதாரச் சீர்கேடு

களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:48 am

DIN

களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
முன்சிறை ஊராட்சி ஒன்றியம், குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட கோழிவிளை - மருதங்கோடு சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோழிவிளை இலங்கை தமிழ் அகதிகள் முகாமிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இச் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்தக் கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது; அப்பகுதியிலுள்ள புளியங்குளமும் பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து காணப்படுகிறது.
ஆகவே அகதிகள் முகாமிலிருந்தும், இறைச்சிக் கடைகளிலிருந்தும் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்காதவாறு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.