கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் எட்வர்ட் தலைமை வகித்தார். செயலர் டி.ராமச்சந்திரன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சங்கத்தின் 25-ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சங்க முன்னாள் செயலர் சி.பால்மணி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
மேலும், தமிழக விவசாயிகள் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப்.5) முழுக் கடையடைப்பு நடத்த வேண்டும். கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் ஏ.பி.முத்து, கே.சிவராமபிள்ளை, ஆர்.ரவீந்திரன், ஜி.என்.பாலமுருகன், கே.சுகுமாரன், கே.துரைசுவாமி, ஏ.சண்முகம், பி.ஆறுமுகம்பிள்ளை, பி.நாயகம், சி.ரெங்கராஜன், ச.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஹைதராபாத்: கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலி; உயிர்பிழைத்த குழந்தை!

ஜல்லி கற்களை ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு! | Tambaram

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


