குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரியில் மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிமை காலை 8 மணிக்கு எடுக்கப்பட்ட அளவீட்டின் படி, அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ., பேச்சிப்பாறையில் 28 மி.மீ., பெருஞ்சாணியில் 15.4 மி.மீ., சிற்றாறு 2இல் 17.2 மி.மீ., அடையாமடையில் 14 மி.மீ., நாகர்கோவிலில் 5.8 மி.மீ., முள்ளங்கினாவிளையில் 4 மி.மீ., கொட்டாரத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு தற்போது விநாடிக்கு 60 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்தத் தண்ணீர் அப்படியே பாசனக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 24 கன அடி நீர்வரத்து உள்ளது. இதர அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பேச்சிப்பாறை அணை தவிர இதர அணைகளின் மதகுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபெடரேஷன் கோப்பை: பெயரை பதிவு செய்தபின் பங்கேற்காமல் தவிா்ப்போருக்கு இந்திய தடகள சம்மேளம் எச்சரிக்கை!

கால்நடை சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெறும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

