நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நாய்ப் பண்ணையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:56 am IST

ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜான்விக்டர்தாஸ் தலைமையில், ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த  மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் அளித்த மனு:
தோவாளை வட்டத்துக்குள்பட்ட ஈசாந்திமங்கலம் பகுதியில் அண்ணா காலனி உள்ளது. இங்கு 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட 100 வீடுகள்  உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில்  சட்ட விரோதமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 2 வீடுகளை இடித்து விட்டு நாய்ப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளிடம்  பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே,  நாய்ப்பண்ணை வைத்துள்ளவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.