கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில், தென் மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அணை, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.
பழையாறு,கோதையாறு, பரளியாறு, குழித்துறையாறு என அனைத்து ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் புகுந்தது.
இதில், நித்திரவிளை, மங்காடு, வாவறை, முன்சிறை, ஏழுதேசம், ஆலவிளை, பனமுகம், இஞ்சிபரம்பு, கோயிக்கல்தோப்பு, அம்பிபள்ளிக்கல், பருத்திக்கடவு, கலிங்கராஜபுரம், ஞாலம், கடுக்கரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள நீர் சூழ்ந்ததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதக்கின்றன. வியாழக்கிழமை மழையின் தீவிரம் சற்று குறைந்ததால், ஓரிரு பகுதிகளில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரியான ராமச்சந்திரன் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வெள்ள சேதங்களை கணக்கெடுத்து வருகிறோம். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் தொடர்ந்து நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
ரயில் சேவை தொடக்கம்: நிலச்சரிவால் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்கள், மண் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததால், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பின்னர், நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சாம்பியன்ஷிப்: அறிமுக போட்டியில் உனாட்டி ஹூடா த்ரில் வெற்றி!

நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன்: அதிதி ஷங்கர்

லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடல்!

அஸ்ஸாம் வெள்ளப் பேரழிவு: பலி 105 ஆக உயர்வு!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


