எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் கைது

நித்திரவிளை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:10 am IST

நித்திரவிளை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பண்டிகை காலங்களில் தீயணைப்புத்துறை, காவல்துறையின் அனுமதிபெற்று பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவக் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  காவல் உதவிஆய்வாளர் சோபனராஜ் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 
உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (54), திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.