மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

கல்குளம் வட்டத்தில்  ரூ. 34 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :23 ஜூலை 2018, 7:56 am IST

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கல்குளம் வட்டம், திருவிதாங்கோடு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.15.73 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மைத்  திட்டப் பணி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தடுப்பணை பணி, ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி சேவை மைய கட்டடப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.