முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேருந்து - ஆட்டோ மோதல்: பேரூராட்சி ஊழியர் சாவு

தக்கலை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் உயிரிழந்தார்.

Updated On :24 ஜூலை 2018, 12:52 am IST

தக்கலை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த ஐரேனிபுரத்தைச் சேர்ந்தவர் ஐசக் (55) . இவர் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சல் கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஷீலா. இவரும் அதே சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார்.
இந்நிலையில், ஐசக்கிற்கு திங்கள்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதற்காக ஐசக்கை ஒரு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அவரது மனைவி ஏஞ்சல், ஷீலா ஆகியோர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ கல்லுவிளையில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலையில் திரும்பியபோது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த ஐசக், அவரது மனைவி ஏஞ்சல் மற்றும்  ஷீலா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர் மோசஸ் காயமடைந்தார். 
காயமடைந்த 4 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, தக்கலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐசக் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்ற இருவரும் தக்கலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.