/
மார்த்தாண்டம் அருகே இறந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை சாலையோரம் கிடந்தது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (55). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விஜயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற விஜயன், இரவு வீடுதிரும்பவில்லையாம். இந்த நிலையில், திங்கள்கிழமை காப்புக்காடு சந்திப்பு அருகேயுள்ள ஒரு கடையின் முன் விஜயன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









