குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், மீன்வளத் துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை கூட்டத்தில் வழங்கலாம்.
பிற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுவாக அளிக்க வேண்டும். அன்று பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரம் அடுத்த மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









