காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி, அமைதி பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், முளகுமூடு கத்தோலிக்க சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். அருள்பணியாளர்கள் ஜெரால்டு ஜஸ்டின், ஆன்றனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நினைவு திருப்பலியில் வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்க சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது.
திருப்பலி முடிவுற்றவுடன் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகிக்க கத்தோலிக்க சங்கத் தலைவர் பிரைட் சேவியர் முன்னிலையில் அமைதி பேரணி நடைபெற்றது.
பின்னர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


