காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி, அமைதி பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், முளகுமூடு கத்தோலிக்க சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். அருள்பணியாளர்கள் ஜெரால்டு ஜஸ்டின், ஆன்றனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நினைவு திருப்பலியில் வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்க சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது.
திருப்பலி முடிவுற்றவுடன் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகிக்க கத்தோலிக்க சங்கத் தலைவர் பிரைட் சேவியர் முன்னிலையில் அமைதி பேரணி நடைபெற்றது.
பின்னர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

கலம் தொடா மகளிர்
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
