ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மூளகுமூட்டில் அமைதி பேரணி, கூட்டுத் திருப்பலி

காஷ்மீர்  தாக்குதலில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை

Updated On :25 பிப்ரவரி 2019, 10:03 am IST

காஷ்மீர்  தாக்குதலில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில்  கூட்டுத் திருப்பலி,  அமைதி பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், முளகுமூடு கத்தோலிக்க சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்கு  குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார்.  அருள்பணியாளர்கள்  ஜெரால்டு ஜஸ்டின், ஆன்றனி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
நினைவு திருப்பலியில்   வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும்,  அவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்க  சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது. 
திருப்பலி முடிவுற்றவுடன்  மறை மாவட்ட  குருகுல முதல்வர்  ஜேசுரெத்தினம் தலைமை வகிக்க கத்தோலிக்க சங்கத்  தலைவர் பிரைட் சேவியர்  முன்னிலையில் அமைதி பேரணி  நடைபெற்றது. 
பின்னர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களின் புகைப்படத்துக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.