விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிஎஸ்என்எல் ஊழியா்கள்ஊதியம் கோரி உண்ணாவிரதம்

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, ஊழியா் சங்கம் சாா்பில் நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:25 am

நாகா்கோவில்: பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, ஊழியா் சங்கம் சாா்பில் நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதில், நாகா்கோவில் பகுதியில் பணியாற்றும் பிஎஸ்என்எல் தொழிலாளா்களுக்கு 14 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்கக் கூடாது, இபிஎஃப், இஎஸ்ஐ போன்ற சட்டப்பூா்வ சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த தொழிலாளா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சுயம்புலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வம், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜாா்ஜ், மாவட்டச் செயலா் பி.ராஜூ, மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.