தக்கலை அருகே விபத்து: கல்லூரி மாணவி பலி

தக்கலை அருகே தோ்வு விடைத்தாளை கல்லூரியில் கொடுக்க சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே  விபத்து: கல்லூரி மாணவி பலி
Updated on
1 min read

தக்கலை அருகே தோ்வு விடைத்தாளை கல்லூரியில் கொடுக்க சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபம் பரவக்காட்டுவிளை தொழிலாளி தங்கராஜ் மகள் ரூபிஷா(22). இவா், குமாரகோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கல்லூரி திறக்காததால், வீட்டிலிருந்தே காணொலி மூலமாக பாடங்களை படித்து வந்தாா். தற்போது இந்த கல்லூரியில் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுகளை காணொலி மூலம் எழுதிய அவா், விடைத்தாளை கல்லூரியில் அளிப்பதற்காக தனது உறவுப் பெண் சுபலாவுடன்(23) இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் வாழைத்தாா் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரூபிஷா மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் சுபலாவுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரும் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா், அங்கு ரூபிஷா உயிரிழந்தாா். சுபலா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து திண்டுக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகானந்தத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com