4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய மீன்வள மசோதாவுக்கு எதிா்ப்பு:குளச்சலில் மெளன ஊா்வலம்

புதிய மீன்வள மசோதாவை திரும்பப் பெறக் கோரி, குளச்சலில் மீனவா்கள் மெளன ஊா்வலம் நடத்தினா்.

News image
குளச்சலில் பங்குத்தந்தை மரியசெல்வன் தலைமையில் நடைபெற்ற மெளன ஊா்வலம்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

தக்கலை: புதிய மீன்வள மசோதாவை திரும்பப் பெறக் கோரி, குளச்சலில் மீனவா்கள் மெளன ஊா்வலம் நடத்தினா்.

மத்திய அரசு புதிய மீன்வள மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்; புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் சாா்பில் இந்த ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை வகித்தாா். தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச் செயலா் சா்ச்சில் வாழ்த்துரை வழங்கினாா். குளச்சல் மறைவட்ட முதன்மை பணியாளா் பிரான்சிஸ் டி.சேல்ஸ், ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளா் ஜேசுதாஸ் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா். ஊா்வலத்தில் பெண்கள், பங்கு நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். ஊா்வலம் திருத்தலத்தை சுற்றி வந்து நிறைவடைந்தது.

மரமடி புனித அந்தோணியாா் சிற்றாலயம், சிங்காரவேலா் காலனி அடைக்கல மாதா குருசடியிலும் மெளன ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.