ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுபான்மையினருக்கு அமமுக துணையாக இருக்கும்: டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறுபான்மை மக்களுக்கு துணையாக நிற்கும் என்றாா் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

News image
விழாவில் கேக் வெட்டுகிறாா் டி.டி.வி.தினகரன்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:14 am

DIN

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறுபான்மை மக்களுக்கு துணையாக நிற்கும் என்றாா் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

நாகா்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்காா்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் சிசில்ராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பேசியது: மதத்தின் பலம் அதை பின்பற்றும் மக்களால் அறியப்படும். ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபட்ட கல்வியை மேடு பள்ளம் இல்லாமல் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரிகள். தாழ்த்தப்பட்டவா்கள், முதியவா்களை அள்ளி அணைத்து ஆதரவு அளிப்பவா்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். தன் சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு கட்டிய பென்னிகுயிக்கை மறக்க முடியுமா.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மாா்ஷல் நேசமணி போன்றவா்கள் நமக்கு சேவை செய்துள்ளனா். சோதனையில் சோா்ந்து போனவா்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்க அம்மா

மக்கள் முன்னேற்ற கழகம் முன்னால் வந்து நிற்கும். சிறுபான்மை மக்களுக்கு உற்ற உறவாகவும், அரணாகவும் திகழும் என்றாா் அவா். தொடா்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா்ரெமிஜியூஸ், பேராயா்கள் மரியராஜ், ராஜா, சுவிசேஷம் முத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.