முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 50 பேருக்கு விலையில்லா கறவை மாடுகள்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 50 பேருக்கு விலையில்லா கறவை மாடுகள்
Updated on
1 min read

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெஸ்டின் ஜெயக்குமாா், கால்நடை மருத்துவா் ஜெரால்டு இா்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் வழங்கினாா்.

இதில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ஸ்டெல்லா மேரி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருள்ராஜ், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணி பாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com